அரசு கல்லூரியின் உள்ளே புகுந்து மாணவர்கள் மீது 50 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்..

நாகை அருகேவுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உள்ளே புகுந்து மாணவர்கள் மீது 50 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

செல்லூரில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை கேலி செய்து தொடர்பாக எம்.காம் மற்றும் பி.காம் மாணவர்களுக்கு இடையே கடந்த சனிக்கிழமை அன்று தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக இரண்டு வகுப்பு மாணவர்களையும் கல்லூரி முதல்வர் கண்டித்ததாக சொல்லப்படுகிறது. அப்போது  பி.காம் மாணவர்களுக்கு ஆதரவாக கல்லூரியில் பயிலாத செல்லூரைச் சேர்ந்த 50 பேர் கொண்ட கும்பல், கல்லூரியின் உள்ளே  நுழைந்து மாணவர்களை தாக்கியுள்ளது.

இதில் 5 மாணவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.