டெல்லி: மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ராஜினாமா செய்தார். துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ராஜினாமாவை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக் கொண்டார். ஏற்கனவே சிபிஐயால் கைது செய்யப்பட்ட சத்யேந்தர் ஜெயினும் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மணீஷ் சிசோடியாவை தொடர்ந்து அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் ராஜினாமாவையும் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றார்.