மதுரை: 100 நாள் திட்டப்பணியில் முறைகேடு புகார் தொடர்பாக ராமநாதபுரம் ஆட்சியர் விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. ராமநாதபுரம் ஆட்சியர் விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. போகலூர் ஒன்றியத்தின் திட்ட மேம்பட்டு அலுவலர் ஆவணங்களுடன் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.