மதுரை: தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது தீவிரமான நடவடிக்கை தேவைப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. தொடர்ந்து குற்றத்தில் ஈடுபடுவோர் மீது தீவிர குற்ற நடவடிக்கை எடுப்பது பற்றி அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
