திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாளுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாளுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் யானை ஆண்டாளுக்கு இன்று 45 பிறந்தநாள். 28.02.1979 ஆம் ஆண்டு பொள்ளாச்சி வனப்பகுதியில் பிறந்த ஆண்டாளை திருப்பூரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் வாங்கி வளர்த்து வந்தார் அவர் பின்பு ஆண்டாளை காரமடை அரங்கநாத சுவாமி கோயிலுக்கு தானமாக வழங்கினார்,

காரமடை கோயிலில் இருக்கும் போது ரஜினிகாந்த நடித்த தம்பிக்கு எந்த ஊர் என்ற படத்தில் ரஜினிக்கு ஆசிர்வாதம் செய்யும் காட்சியில் வரும், பின்பு ஆண்டாளை ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வேண்டும் என முறைப்படி எழுதி வாங்கி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு தானமாக வழங்கினார், ஆண்டாள் ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு 17.10.1986 ஆம் ஆண்டு தன் முதல் கை சேவையை ஆரம்பித்தது, பெருமாளுக்கான தன் முதல் சேவையிலேயே தங்க குடத்தில் புனித நீர் எடுக்கும் பாக்கியத்தை பெற்றது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.