தெலுங்கு சினிமாவின் விவேக்கிற்கு பிறந்தநாள்.. போஸ்டர் வெளியிட்ட ஜெயிலர் படக்குழு!

தெலுங்கு சினிமாவின் விவேக் :

தெலுங்கு சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாகவே காமெடி, கதாநாயகன் தற்போது வில்லன் என்று கலக்கி வரும் நடிகர் சுனிலுக்கு இன்று 49-வது பிறந்தநாள். சுனில் கடந்த 20 வருடங்களில் தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சிரஞ்சீவி, ரவிதேஜா, வெங்கடேஷ் தொடங்கி தற்போது இளம் கதாநாயகர் வரிசையில் இருக்கும் ராம்சரண், அல்லு அர்ஜுன் வரை நடித்துள்ளார்.

இதுவரை தெலுங்கு சினிமாவில் மட்டுமே நடித்த வந்த சுனில் தற்போது Pan India நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். குறிப்பாக 2021-ல் வெளியான புஷ்பா திரைப்படத்தில் அவர் நடித்த வில்லன் கதாபாத்திரம் தெலுங்கு மட்டுமல்லாமல் ஹிந்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் புஷ்பா-2ல் அவர் கதாபாத்திரம் குறித்து ரசிகர்கள் பலர் ஆவலாக உள்ளனர். கடந்த 2010-ல் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் அவர் கதாநாயகனாக நடித்த மரியாது ராம்மன்ணா திரைப்படம் தமிழில் சந்தானம் நடிப்பில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று ரீமேக் ஆனது. மேலும் மலையாள ரீமேக்கில் திலீப் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சுனில் :

இதுவரை தெலுங்கு சினிமாவை மட்டும் கலக்கி வந்த சுனில் தற்போது தமிழ் சினிமாவிற்கும் அறிமுகமாகவுள்ளார். இயக்குனர் நெல்சன்- ரஜினிகாந்த் கூட்டணியில் இப்போது உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இன்று சுனிலுக்கு பிறந்தநாள் என்பதால் தற்போது ஜெயிலர் படக்குழுவினர் அவர் கதாபாத்திரம் குறித்த போஸ்டர் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளனர். மேலும் தற்போது வெளியாகியுள்ள இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் ஜெயிலர் திரைப்படத்தின் மீதும் சுனில் கதாபாத்திரத்தின் மீதும் தற்போது பெரும் எதிர்பார்ப்பு உருவாகிவருகிறது.

ஜெயிலருக்கு பிறகு சுனிலின் சினிமா வாழ்க்கை..? :

ஆகஸ்ட் மாதம் வெளியீட்டிற்கு தயாராகி வரும் ஜெயிலர் திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. நடிகர் சுனிலை பொறுத்தவரை அவரின் நகைச்சுவை சார்ந்த நடிப்பிலும் வில்லன் சார்ந்த நடிப்பிலும் ஒரு தனித்துவத்தை பின்பற்றுவார். குறிப்பாக 2002-ல் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான இந்திரா திரைப்படத்தில் இவர் நடித்த காமெடி கலந்த குணசித்திர கதாபாத்திரம் மாபெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வரும் சுனிலை புஷ்பா திரைப்படம் மூலம் ரசிகர்கள் வெகுவாக ஏற்றுக்கொண்டுள்ளனர். பொதுவாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்த பிரபலங்களை வில்லன் கதாபாத்திரத்தில் ஏற்றுகொள்வது என்பது அவ்வளவு எளிமையான விஷயம் இல்லை. ஆனால் சுனிலை வில்லனாக ஏற்றுக்கொண்டது எனக்கே ஆச்சிரியம் தான் என புஷ்பா திரைப்படத்தின் இயக்குனர் சுகுகுமார் திரைப்படம் வெளியான நேரத்தில் நேர்காணல் ஒன்றில் கூறிருந்தார். மேலும் ஜெயிலர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ஓர் உச்சத்தை சுனில் தொடுவார் என்று தெலுங்கு சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.