பெட் ஷீட்களைப் பயன்படுத்தி தப்பியோடிய சிறைக் கைதி! செய்வதறியாது தவித்த காவலர்கள்: வீடியோ


நூரோ தீவின் கிழக்கு பகுதியில் உள்ள உயர் பாதுகாப்பு இ கரோஸ் சிறைச்சாலையில் இருந்து கைதி ஒருவர் பெட் ஷீட்களைப் பயன்படுத்தி தப்பித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மாபியா தலைவன்

நூரோ(Nuoro)தீவின் கிழக்கு பகுதியில் உள்ள உயர் பாதுகாப்பு இ கரோஸ் சிறைச்சாலையில், “பல்லோன்” என்று அழைக்கப்படும் மார்கோ ராடுவானோ(Marco Raduano)என்ற மாஃபியா தலைவன் அடைக்கப்பட்டு இருந்தான்.

இந்நிலையில் சனிக்கிழமை காலை சிறை கைதி மார்கோ ராடுவானோ தப்பிச் சென்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

39 வயதான சிறைக் கைதி எப்படியோ சிறைச்சாலையின் முற்றத்துக்கான சாவியை பெற்றுள்ளார், பின்னர் பல முடிச்சுகள் போடப்பட்ட படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்தி வெளிப்புறச் சுவரைத் தாண்டியுள்ளார்.

காவலர்கள் விழித்தெழுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, அவர் தப்பியோடு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

கர்கானோ மாஃபியாவின் உறுப்பினரான ராடுவானோ  மாஃபியா குற்றத்திற்காக 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, 2046 வரை தண்டனையில் அடைக்கப்பட இருந்ததாக இத்தாலிய பத்திரிகையான இல் மெசாகெரோ தெரிவித்துள்ளது.

ஊழியர்கள் பற்றாக்குறை

இது தொடர்பாக பொதுச் செயலாளர் ஜியோவானி தெரிவித்த தகவலில், பல மாதங்களாக நாங்கள் ஊழியர்கள் பற்றாக்குறையை கண்டித்து வருகிறோம், இதுவே நூரோ சிறையில் பாதுகாப்பை சமரசம் செய்த முக்கிய காரணியாகும்.” என குறிப்பிட்டுள்ளார்.

பெட் ஷீட்களைப் பயன்படுத்தி தப்பியோடிய சிறைக் கைதி! செய்வதறியாது தவித்த காவலர்கள்: வீடியோ | Mafia Boss Escapes From Prison Using Bed Sheetstwitter 

சிறை கைதி ராடுவானோ தப்பிச் சென்றதை தொடர்ந்து சார்டினியாவில்(Sardinia) தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தப்பித்தல் நடவடிக்கை நன்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று  துணை நீதி அமைச்சர் பிரான்செஸ்கோ பாலோ சிஸ்டோ தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.