அகவிலைப்படியை உயர்த்த மாநில அரசிடம் நிதியில்லை – மம்தா பானர்ஜி

மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகராக அகவிலைப்படி அளிக்கக்கோரி மேற்குவங்க அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அண்மையில் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியில் மகிழ்ச்சி இல்லையெனில் தனது தலையை வெட்டி எடுத்து கொள்ளும்படி அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மார்ச் மாதம் முதல் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இதை ஏற்காமல் மேற்குவங்க மாநில அரசு ஊழியர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய மம்தா பானர்ஜி, அகவிலைப்படியை மேலும் உயர்த்தி அளிக்க சாத்தியமில்லை என்றும், மாநில அரசிடம் அதற்கான நிதியில்லை என்றும் தெரிவித்தார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.