ஸ்டாலின் -பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு: பட்ஜெட்டில் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று (மார்ச் 15) மாலை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2023-2024ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர்

தலைமையில் மார்ச் 9ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

பட்ஜெட் தயாரிக்கும் பணிகளை கடந்த சில மாதங்களாக நிதித்துறையினர் மேற்கொண்டு வந்தனர்.

இந்த பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வர உள்ளன, ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு ஒதுக்கப்பட உள்ளது, சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படுமா என்று பல்வேறு எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை திட்டம் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் இம்முறை பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அறிவித்தார். மகளிர் தின வாழ்த்துச் செய்தியிலும் அதை குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என உறுதியான நிலையில் யார் யார் அந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள், எப்போது திட்டம் தொடங்கிவைக்கப்படும் என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரது குடும்பங்களுக்கு இந்த திட்டம் மூலம் பணம் வழங்கப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சூழலில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று மாலை சந்தித்து பேசினர். பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கோட்டை வட்டாரங்களிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.