அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து சேலத்தில் நேற்று மாலை அவருக்கு கட்சி நிர்வாகிகள் சார்பில் உற்சாக அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் ஜெயலலிதா மணிமண்டபத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, அதிமுக – பாஜக கூட்டணி குறித்து முடிவு செய்பவர்கள் மத்தியில் உள்ள தேசிய தலைவர்களே தவிர, மாநிலத்தில் உள்ளவர்கள் அல்ல என்றார்.
