பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலக இடம் தொடர்பான வழக்கில் இருந்து, உயர்நீதிமன்ற நீதிபதி எம் தண்டபாணி விலகியுள்ளார்.
வழக்கை வேறு நீதிபதி முன்பு பட்டியலிடவும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து உள்ளார் நீதிபதி எம் தண்டபாணி.
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக வந்த நோட்டீசை எதிர்த்து, முரசொலி அறக்கட்டளை வழக்கு தொடர்ந்திருந்தது நிலையில், நீதிபதி விளக்கியுள்ளார்.
வழக்கு விவரம் : சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியின் அலுவலகம் அமைந்துள்ளது.
பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் : வழக்கிலிருந்து உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி விலகல்! #DMK #Murasoli #MKStalin #BJP #SCST #ChennaiHC #Chennai #Tamilnadu @arivalayam pic.twitter.com/WuJ3jD2eLi
— Seithi Punal (@seithipunal) April 3, 2023
இந்த அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில், இது குறித்து தேசிய எஸ்சி எஸ்டி ஆணையதிற்கு பாஜகவின் சீனிவாசன் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் கடந்த 2019 ஆம் ஆண்டு தேசிய எஸ்சி எஸ்டி ஆணையம், விளக்கமளிக்க கோரியும், நிலத்திற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்க கோரியும் முரசொலி அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீசை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. தற்போது இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி தண்டபாணி, வேறு நீதிபதிக்கு வழக்கை மாற்ற கோரி தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துவிட்டு, வழக்கிலிருந்து விலகி உள்ளார்.
செய்தியின் சுருக்கம் : முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக, தேசிய எஸ்சி எஸ்டி ஆணையம் வழங்கிய நோட்டிஸை எதிர்த்து, முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கிலிருந்து, உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி விலகல்; வழக்கை வேறு நீதிபதி முன்பு பட்டியலிட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை.