படகு கவிழ்ந்து விபத்து அகதிகள் 25 பேர் பலி| 25 refugees killed in boat accident

துனிஷ்-துனிஷியாவில் இருந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக மத்திய தரைக்கடல் வழியாக செல்ல முயன்ற ஆப்ரிக்க அகதிகளின் படகு கவிழ்ந்து நேற்று 25 பேர் பலியாகினர்.

ஆப்ரிக்க நாடான துனிஷியாவில் இருந்து, ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு பலர் சட்டவிரோதமாக படகில் செல்வது அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று துனிஷியாவில் இருந்து இத்தாலிக்கு, 100க்கும் மேற்பட்டோர் மத்திய தரைக்கடல் வழியாக படகில் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக வீசிய காற்றின் வேகத்தில், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அனைவரும் கடலில் மூழ்கினர்.

தகவலறிந்து வந்த கடலோர காவல் படையினர், 72 பேரை பத்திரமாக மீட்ட நிலையில், கடலில் மூழ்கி இறந்த 25 உடல்களையும் மீட்டனர். மேலும், 15 முதல் 20 அகதிகளின் நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணிகளில் கடலோர காவல் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.