அரசு பங்களாவை காலி செய்தார் ராகுல் காந்தி!!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி 19 ஆண்டுகள் வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்தார்.

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து, அவர் எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

எனவே, அரசு பங்களாவை அவர் காலி செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. ராகுல் காந்தி அரசு பங்களாவை ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என மக்களவை செயலகம் நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து துக்ளக் லேன் பகுதியில் ராகுல் தான் தங்கியிருந்த அரசு பங்களாவை நேற்று காலி செய்தார். தனது பொருட்களை அங்கிருந்து தனது தாயார் சோனியா காந்தியின் ஜன்பத் இல்லத்திற்கு கொண்டு சென்றார்.

2004ஆம் ஆண்டு முதல் ராகுல் காந்தி காந்தி மக்களவை உறுப்பினராக உள்ளார். எனவே, சுமார் 19 ஆண்டுகள் வசித்து வந்த பங்களாவை அவர் காலி செய்துள்ளார். அரசு பங்களாவில் இருந்த மகிழ்ச்சியான தருணங்களை மறக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.