ராகுல் காந்தி தகுதி நீக்கம்: காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம்!

கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் இன்று (ஏப்ரல் 15) காங்கிரஸ் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சேலம்

சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் சேலம் ரயில் நிலையத்தில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் காங்கிரஸ் ஆர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் இருந்து கோவை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு அமர்ந்து போராடத்தில் ஈடுபட்டு ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

புதுக்கோட்டை

150க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்திற்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ரயில் நிலையத்துக்குள் நுழைந்த காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி, வேலூர், தஞ்சாவூர், கோவில்பட்டி என பல ஊர்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.