பிரபல நடிகை நடிகையின் ப்ளூ டிக் -ஐ நீக்கிய ட்விட்டர் நிறுவனம்…!

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது ஆரம்பமாகி உள்ளது.பொன்னியின் செல்வன் 2 பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளதால், இப்படத்தின் குழுவினருடன் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார் நடிகை திரிஷா.

நேற்று கோவை ப்ரோசோன் மாலில் பொன்னியன் செல்வன் திரைப்பட இரண்டாம் பாகத்தின் விளம்பர நிகழ்வு நடைபெற்றது.நிகழ்வில் நடிகர்கள் விக்ரம்,ஜெயம் ரவி,கார்த்தி மற்றும் நடிகைகள் திரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுதவிர சமூக வலைதளங்களிலும் படக்குழுவினர் வித்தியாசமாக புரமோஷன் செய்து வருகின்றனர். பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரிலீஸ் ஆன சமயத்தில் நடிகை திரிஷா டுவிட்டரில் தனது பெயரை குந்தவை என மாற்றினார். அதேபோல் கார்த்தி வந்தியத்தேவன் எனவும், ஜெயம் ரவி அருண்மொழிவர்மன் எனவும், விக்ரம் ஆதித்த கரிகாலன் எனவும் பெயரை மாற்றி இருந்தனர்.

தற்போது பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், அதனை புரமோட் செய்யும் விதமாக தற்போது நடிகை திரிஷா ட்விட்டரில் தனது பெயரை மாற்றி இருக்கிறார். அவர் பெயரை குந்தவை என மாற்றியதும் அவரது ப்ளூ டிக் பறிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஷாக் ஆன நடிகை திரிஷா மீண்டும் தனது பெயரை ஏற்கனவே இருந்தபடியே திரிஷ் என மாற்றி இருக்கிறார். அப்படி இருந்தும் அவருக்கு ப்ளூ டிக் மீண்டும் வழங்கப்படவில்லை.

அதே போல் அருண்மொழி வர்மன் என நடிகர் ஜெயம் ரவி மாற்றியதால் இவரது ப்ளூ டிக் பறிக்கப்பட்டுள்ளது.ட்விட்டர் புதிய விதிப்படி பெயரை மாற்றினால் ப்ளூ டிக் மறைந்து விடும் அதனால் த்ரிஷாவும் ஜெயம் ரவி இருவரின் ப்ளூ டிக்கையும் நீக்கியிருக்கிறது ட்விட்டர் நிர்வாகம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.