கர்ப்பிணியான சிம்பு பட நடிகையை தரதரவென இழுத்து சென்ற கணவர்: வெடித்த சர்ச்சை.!

சிம்பு நடிப்பில் வெளியான ‘சிலம்பாட்டம்’ படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சனா கான். அதனை தொடர்ந்து தமிழில் ஒரு நடிகையின் டைரி, பயணம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சனா கான் இணையத்தில் வைரலான தன்னுடைய சர்ச்சையான வீடியோ குறித்து விளக்கமளித்துள்ளார்.

ஏப்ரல் 14 முதல் 17 வரையிலான பிளாக்பஸ்டர் Value Days- வீடு, சமையலறை மற்றும் கோடைகால உபகரணங்களுக்கான அற்புதமான சலுகைகளைப் பெறுங்கள்.
தமிழ் மட்டுமில்லாமல் இந்தியிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இதுதவிர வேறு சில மொழி படங்களிலும் நடித்துள்ள சனா கான், இஸ்லாம் மதத்தை முழுமையாக பின்பற்றுவதற்காக சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்தார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதன்பின்னர் சூரத்தை சார்ந்த தொழிலதிபர் முப்தி அனாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் சனா கான். இவர்களின் திருமணம் சூரத்தில் நடைபெற்றது. இதில் இருவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலானது.

சினிமாவை விட்டு விலகினாலும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களுடன் டச்சிலே இருக்கிறார் சனா கான். இந்நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கும் சனா கான் மும்பையில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி ஒன்றில் தனது கணவருடன் கலந்துக்கொண்டார்.

வீட்டில் வைத்து மோசமான காரியத்தில் ஈடுபட்ட தொழிலதிபர்: பிரபல நடிகை பகீர் புகார்.!

அப்போது சனா கானை அவரது கணவர் அனஸ் கையை பிடித்து தரதரவென இழுத்து செல்லும் வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் வைரலாகின. இதனைப்பாரத்த நெட்டிசன்கள் கர்ப்பமான மனைவியை இப்படியா அழைத்து செல்வது என கண்டனங்கள் தெரிவித்தனர். இதனால் இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் சர்ச்சைகளை கிளப்பியது.

விக்ரம் பிறந்தநாள் ஸ்பெஷல்: கொல மாஸாக வெளியான ‘துருவ நட்சத்திரம்’ பட அப்டேட்.!

இந்நிலையில் இது தொடர்பாக சனா கான் தற்போது அளித்துள்ள விளக்கத்தில், நாங்கள் நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்ததும் கார் டிரைவரை அழைக்க முடியவில்லை. இதனால் வெகு நேரமாக அங்கு காத்திருந்தால் அசெளகரியமாக உணர்ந்தேன். இதனால் தண்ணீர் குடிக்கவும், காற்று வாங்கவும் என்னை அங்கிருந்து அவசரமாக காருக்கு அழைத்து சென்றார் என் கணவர். எனக்காக கவலைப்பட்டத்திற்கு நன்றி எனக்கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சனா கான்.

View this post on InstagramA post shared by Viral Bhayani (@viralbhayani)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.