காவல்துறை மானிய கோரிக்கை: முதல்வர் ஸ்டாலின் பதிலுரை – அதிமுக வெளிநடப்பு!

எதிர்க்கட்சி தலைவர்

உரையை நேரலை செய்யாத காரணத்தால் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்வர்

பதிலுரை வழங்கி வரும் போது அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் முதல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை நடைபெறுகிறது. நேற்று (ஏப்ரல் 20) முதல் காவல் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

காவல் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, ஆருத்ரா நிறுவன மோசடி, வேங்கை வயல் சாதிக் கொடுமை, விசாரணைக் கைதிகளில் பற்களை பிடுங்கிய பல்வீர் சிங் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, இன்று (ஏப்ரல் 21) காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசத் தொடங்கினார். அப்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உரையை நேரலை செய்யாத காரணத்தால் வெளிநடப்பு செய்ததாக அதிமுக உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதே புகாரை அதிமுகவினர் ஏற்கெனவே முன்வைத்த நிலையில் சட்டப் பேரவையிலேயே சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.