எம்பிலிப்பிட்டிய உட்பட நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளுக்கு விசேட மயக்க மருந்து நிபுணர்கள்

எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலை உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள பல வைத்தியசாலைகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 08 மயக்க மருந்து நிபுணர்களை சுகாதார அமைச்சு நியமித்துள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் ஆலோசனைக்கு அமைய இந்த வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலை, உடுகம ஆதார வைத்தியசாலை, கம்புறுப்பிட்டிய ஆதார வைத்தியசாலை, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை, திக் ஓயா பொது வைத்தியசாலை மற்றும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை ஆகியவற்றிற்கு கடமையாற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.