இன்று பல மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்க கூடும்

இன்று (21) பல மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்க கூடும் எனவே மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேல், வடமேற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும், 39 முதல் 45 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் நாளைய தினம் சாதாரண வெப்பநிலை நிலவும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.