அதிமுக வாபஸ்: பாஜக போட்ட போன் கால்… உடனே சம்மதித்த எடப்பாடி பழனிசாமி

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் புலிக்சேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அன்பரசன் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.

முப்பெரும் விழா குறித்த ஓபிஎஸ் அதிமுக அணியின் ஆலோசனை கூட்டம்

அதிமுக – பாஜக கூட்டணி தொடர்கிறது என்று அமித் ஷா கூறினாலும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார். இது அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு கணிசமான இடங்களை ஒதுக்கிய நிலையில் கர்நாடகாவில் ஓரிரு தொகுதிகளைக் கூட அதிமுகவுக்கு ஒதுக்க பாஜக முன் வராத நிலையில் எடப்பாடி பழனிசாமி புலிகேசி நகர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளரை அறிவித்தார்.

அன்பரசன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கலும் நடைபெற்றது. இந்நிலையில் வேட்பு மனு வாபஸ் பெறப்பட்டதாக அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K.பழனிசாமி அவர்களை இன்று (24.04.2023 – திங்கட் கிழமை), பாரதிய ஜனதா கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, கர்நாடக மாநிலத்தில் 10.05.2023 அன்று நடைபெற உள்ள சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், (159) புலிகேசிநகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ள கழக வேட்பாளர் D.அன்பரசனை திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தலைமை பரிசீலனை செய்து, பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்று, கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான D. அன்பரசன் தனது வேட்பு மனுவை திரும்பப் பெற்றுள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்தச் செய்தி வெளியிடப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக ஓபிஎஸ் தரப்பும் வேட்பாளர்களை அறிவித்தது. அவர்களும் வாபஸ் பெற்றுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.