போர்வெல் இயந்திர குழாய் விழுந்து புலம்பெயர் தொழிலாளி பலி..!

காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சத்திரம் பகுதியில், ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியின் போது இயந்திரத்திலிருந்து கீழே விழுந்த இரும்பு குழாய் தாக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

மேல்சிறுணை கிராமத்தைச் சேர்ந்த கோடீஸ்வரன் என்பவர் வீடு கட்டுவதற்காக போர்வெல் இயந்திரம் மூலமாக ஆழ்துளைக்கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராத விதமாக இயந்திரத்தில் இருந்து 20 அடி உயர இரும்பு குழாய் கழன்று பணி செய்து கொண்டிருந்த சத்தீஸ்கர் மாநில புலம்பெயர் தொழிலாளி மேக்ராம் மீது விழுந்ததில், அவர் அதே இடத்திலேயே உயிரிழந்தார்.

வழக்குப்பதிவு செய்த பாலுசெட்டி சத்திரம் போலீசார், அஜாக்கிரதையாக செயல்பட்டதாக போர்வெல் இயந்திர உரிமையாளர் செல்வராஜ் மற்றும் ஓட்டுநர் மணி ஆகியோரை கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.