Ponniyin Selvan 2: ஜெயம் ரவி பற்றி கார்த்தி சொன்னது அப்போ புரியல இப்போ தான் புரியுது

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
Karthi about Jayam Ravi: அருண்மொழி வர்மனாக நடித்திருக்கும் ஜெயம் ரவி பற்றி கார்த்தி சொன்னது இப்போது தான் புரிகிறது என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

​பொன்னியின் செல்வன் 2​மணிரத்னம் இயக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் 2 படம் ஏப்ரல் 28ம் தேதி அதாவது நாளை ரிலீஸாகவிருக்கிறது. அந்த படத்தில் நடித்திருக்கும் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் பொன்னியின் செல்வன் 2 படத்தை பல்வேறு நகரங்களில் அழகாக விளம்பரம் செய்துள்ளனர். விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் ஜெயம் ரவி பற்றி கார்த்தி ஒரு விஷயம் சொன்னார்.
​கார்த்தி​சென்னையில் நடந்த பொன்னியின் செல்வன் 2 பட விழாவில் பேசிய கார்த்தி, ஜெயம் ரவி ரொம்ப ஜாலியானவர். ஷூட்டிங் ஸ்பாட்டில் நானும், அவரும் பேசிக் கொண்டே இருப்போம். ஏதாவது ஜோக் அடிப்பார் என்றார். ஜெயம் ரவியை பார்த்தால் சீரியஸான ஆள் மாதிரி இருக்கிறதே. ஆனால் கார்த்தி வேற மாதிரி சொல்கிறாரே என்றார்கள் ரசிகர்கள்.
​ஜெயம் ரவி​
சென்னையை அடுத்து கோவை, ஹைதராபாத், மும்பை, டெல்லி என பல்வேறு நகரங்களுக்கு சென்றது படக்குழு. சென்ற இடமெல்லாம் செம ஜாலியாக பேசி அனைவரையும் வியக்க வைத்துவிட்டார் ஜெயம் ரவி. அதிலும் மும்பையில் இருக்கும் செய்தியாளர்கள் தன் நரை முடி பற்றி கேட்டதற்கு, உங்களுக்கும் வெள்ளை முடி எனக்கும் வெள்ளை முடி தான் இருக்கு என கூற அங்கிருந்த அனைவரும் சிரித்துவிட்டார்கள்.Ponniyin Selvan 2: நரை முடி பற்றி கேட்ட செய்தியாளர்கள்: வேற மாதிரி பதில் சொன்ன ஜெயம் ரவி, சிரித்த படக்குழு​

​ஐஸ்வர்யா ராய்​முன்னதாக ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராயை ஜெயம் ரவி வெட்கப்பட வைத்தார். நான் பாதி தெலுங்கு, பாதி தமிழ். ஆனால் 100 சதவீதம் ஐஸ்வர்யா ராய் ரசிகன் என ஜெயம் ரவி கூறியதை கேட்டு அவர் வெட்கப்பட்டு சிரித்தார். மேலும் ஐஸ்வர்யா ராய் தன் கையை லேசாக தொட்டதற்கே அப்படி சந்தோஷப்பட்டார் ஜெயம் ரவி. இந்த மனுஷன் இவ்ளோ ஜாலியான ஆளுனு இத்தனை நாளா தெரியாமப் போச்சே என்கிறார்கள் ரசிகர்கள்.

​Ponniyin Selvan 2: ஐஸ்வர்யா ராயை அப்படி வெட்கப்பட வைத்த ஜெயம் ரவி: வீடியோவை பாருங்க

​ரசிகைகள்​Ponniyin Selvan 2: இதுலாம் நியாயமே இல்ல ஜெயம் ரவிணா: வருத்தத்தில் ரசிகைகள்பெங்களூர் நிகழ்ச்சியில் ரசிகைகள் ஹக் கேட்க உடனே மேடையில் இருந்து குதித்து வந்து அவர்களை ஹக் செய்தார் ஜெயம் ரவி. அதை சத்தியமாக யாருமே எதிர்பார்க்கவில்லை. தினம் தினம் ரசிகர்களை வியக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான் கார்த்தி அப்போ சொன்னது புரியல இப்போ தான் புரிகிறது என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

​கண்ணீர்​ஜெயம் ரவி ஜாலியான ஆள் மட்டும் இல்லை எமோஷனலான ஆளும் கூட. பெங்களூர் நிகழ்ச்சியில் ரசிகர்கள், ரசிகைகள் தன் மீது வைத்திருக்கும் அன்பை பார்த்து பொசுக்குனு கண் கலங்கிவிட்டார். ஏய் என்னய்யா இந்த மனுஷன் இப்படி அழுதுவிட்டார். அடடா பாசக்காரனாக இருக்கிறாரே என ரசிகர்களும் ஃபீல் செய்துவிட்டார்கள்.

​Ponniyin Selvan 2: தெரியாமல் இடித்த ஐஸ்வர்யா ராய்: குஷியில் ஜெயம் ரவி என்ன செய்தார் தெரியுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.