ஓபிஎஸ்ஸுக்கு அடி மேல் அடி: புதிதாய் சேர்ந்த இன்னொரு வழக்கு!

அதிமுகவை கைப்பற்றும் நோக்கில் ஓ.பன்னீர் செல்வம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றன. ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், பொதுச் செயலாளர் தேர்தல் முடிவை அறிக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.

லாரி சென்றதில் இடிந்து விழுந்த பாலம் குறித்து பேசுவதற்கு அ.தி‌.மு.க- பா.ஜ.க போராட்டம்!

இதில் அனைத்திலும்

முன்னெடுத்தவை அவருக்கு எதிராகவே முடிந்தன. கர்நாடக சட்டமன்றத் தேர்தலை பயன்படுத்தி மீண்டும் இரட்டை இலைக்கு உரிமை கொண்டாடி

தரப்புக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டது ஓபிஎஸ் தரப்பு.

ஆனால் தேர்தல் ஆணையம் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்ததால் மீண்டும் ஓபிஎஸ் அணிக்கு சிக்கல் உருவானது.

ஓபிஎஸ் அணி சார்பில் காந்தி நகர் தொகுதியில் ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் ஏப்ரல் 20ஆம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

அதில், “இரட்டை இலை சின்னம் எங்களுக்கு சொந்தமானது. அதனால், ஓபிஎஸ் அணி வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது” என வலியுறுத்தி இருந்தார். அதே வேளையில் காந்தி நகர் வேட்பாளர் குமார் அதிமுகவின் பெயரில் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து பி பார்ம் பெற்று தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தார்.

இதை எதிர்த்து கர்நாடக அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார், போலியான ஆவணங்கள் மூலம் இரட்டை இலை சின்னத்தை குமார் கோரியதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் நீதிமன்ற அனுமதியின்பேரில் குமார் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு பரிந்துரை செய்தனர்.

அதன் பேரில் காட்டன்பேட்டை காவல் துறையினர், ஓபிஎஸ் அணியின் வேட்பாளர் குமார் மீது தேர்தல் ஆணையத்துக்கு தவறான தகவல் அளித்ததாக இந்திய தண்டனைச் சட்டம் 1860 உட்பிரிவு 171 ஜீ – பிரிவின் கீழ் வ‌ழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக, ஏப்ரல் 24ஆம் தேதி பாஜக மேலிடத்தின் வேண்டுகோளின் காரணமாக குமார் தனது வேட்பு மனுவை திரும்ப பெற்றார். எடப்பாடி பழனிசாமியும் அதிமுக சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் நிறுத்தப்பட்ட அன்பரசனும் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.