The flight from Trichy made an emergency landing halfway through | திருச்சியில் கிளம்பிய விமானம் பாதியில் அவசர தரையிறக்கம்

மும்பை, திருச்சியில் இருந்து தென்கிழக்காசிய நாடான சிங்கப்பூருக்கு இண்டிகோ விமானம் நேற்று முன்தினம் கிளம்பியது. சிறிது நேரத்தில் தங்கள் கேபினில் தீ எரியும் வாசம் வந்ததை பைலட்கள் உணர்ந்தனர்.

எச்சரிக்கை அடைந்த பைலட்கள், விமானத்தை மற்றொரு தென்கிழக்காசிய நாடான இந்தோனேஷிய விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கினர்.

உடனடியாக பயணியர் இறக்கி விடப்பட்டு, விமானத்தை அதிகாரிகள் தீவிர பரிசோதனை செய்தனர். பின், 12 மணி நேரம் கழித்து மாற்று விமானம் வாயிலாக பயணியர் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால், விமானத்தில் எத்தனை பயணியர் இருந்தனர் என்பது போன்ற விபரங்களை இண்டிகோ நிறுவனம் வெளியிடவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.