டிடிவி தினகரன்: ‘சும்மா வாய்கிழிய பேசுனா மட்டும் போதுமா.?’.. நடவடிக்கை எங்க.?

பெண்ணை தற்கொலைக்கு தூண்டியர்வகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அடுத்து சசிகலா? ஓபிஎஸ் – டிடிவி தினகரன் பேட்டி!

மதுரை மாவட்டத்தில் உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் மனைவி நாகலட்சுமி. இந்த தம்பதிக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளது. 100 வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக நாகலட்சுமி பணியாற்றி வந்தார். இந்த சூழலில் நாகலட்சுமிக்கு பணித்தள பொறுப்பு வழங்கப்படவில்லை என அதே கிராமத்தைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன் மற்றும் ஊராட்சி செயலாளர் முத்து ஆகியோர் நாகலட்சுமியை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர்.

பொறுத்துப் பார்த்த நாகலாட்சுமி காவல்நிலையத்தில் புகார் அளிக்கவே, இந்த பிரச்சனை பூதாகரமாக மாறியுள்ளது. நாகலட்சுமியை அடிக்க அந்த மூவர் பாய்ந்தததாகவும் கூறப்படுகிறது. அதையடுத்து வார்டு உறுப்பினர்களும், ஊராட்சி செயலாளரும் நாகலட்சுமிக்கு வேலை வழங்க மறுத்துவிட்டனர். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நாகலட்சுமி, ஆட்சியரிடம் மனு அளிக்க தனது கிராமத்தில் இருந்து அரசு பேருந்தில் சென்றுள்ளார்.

பேருந்து சிவரக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது, திடிரென ஓடும் பேருந்தில் இருந்து நாகலட்சுமி குதித்தார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நாகலட்சுமி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாகலட்சுமியின் 5 பெண் குழந்தைகளும் நிற்கதியாக நின்ற காட்சி தமிழக மக்களின் ஆன்மா உலுக்கியது.

இந்தநிலையில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில், ‘‘மதுரை மாவட்டம் மையிட்டான்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பொறுப்பாளர் பணியில் இருந்த நாகலட்சுமி, ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டு ஒரு மாதம் ஆனநிலையிலும் தற்கொலைக்கு காரணமானவர்கள் இதுவரை கைது செய்யப்படாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நாகலட்சுமியின் ஐந்து குழந்தைகளும் கணவரும் ஆதரவற்ற நிலையில் உள்ள சூழலில், அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது பற்றி வாய்கிழிய பேசும்

அரசு, நாகலட்சுமிக்கு ஆட்சியர் வழங்கிய பொறுப்புக்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் மீதும், நாகலட்சுமியை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன?

நாகலட்சுமி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், அவரது குடும்பத்துக்கு உரிய சட்ட உதவிகளை செய்திட வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகின்றேன்’’ என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.