கோரமண்டல் ரயில் விபத்து | உயிரிழப்பு 70 ஆக அதிகரிப்பு; 350+ காயம்

பாலாசூர்: ஒடிசா ரயில் விபத்தில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டம் அருகே வெள்ளிக்கிழமை இரவு சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. ஒடிசாவின் பாஹா நாகா பஜார் ரயில் நிலையம் அருகே ரயில்கள் மோதிய இந்த விபத்தில் பயணிகள் பலரும் சிக்கியுள்ளனர்.

70 பேர் உயிரிழந்துள்ளனர். 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்கள் கோபால்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஒடிசா மாநில தலைமைச்செயலாளர் தகவல் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி இரங்கல்: ஒடிசா ரயில் விபத்தால் மனவேதனை அடைந்துள்ளேன். ரயில்வே அமைச்சர் உடன் பேசி உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஹவுராவில் இருந்து இயக்கப்படும் சென்னை மெயில் உட்பட 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் விபத்து எதிரொலியாக மேலும் 5 ரயில்கள் மாற்று பாதையில் இயக்கம் என்று கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நிவாரணத் தொகை: ஒடிசாவில் ரயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம், கடுமையான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

மேலும், “சம்பவ இடத்திற்கு விரைகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். புவனேஸ்வர், கொல்கத்தாவில் இருந்து மீட்புக் குழுக்கள் வந்துள்ளன” என்றும் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ரவி இரங்கல்: ஒடிசாவில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதால் மிகுந்த வேதனை அடைந்தேன். அன்புக்குரிய உறவுகளை இழந்த குடும்பங்களுக்காக என் இதயம் வருந்துகிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். அனைத்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருகின்றன.

முதல்வர் ஸ்டாலின்: ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தொடர்புகொண்டு விபத்து குறித்துக் கேட்டறிந்தேன். அவர் கூறிய தகவல்கள் கவலையளிக்கிறது. விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்களையும், மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் ஒடிசாவுக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டிருக்கிறேன். உடனடியாக ஹெல்ப்லைன் உருவாக்கி உதவிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

> கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10-12 பெட்டிகள் கவிழ்ந்துள்ளதாக தகவல்

> ரயிலில் சென்னை வருவதற்கு 800-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்திருந்ததாக தகவல் .

ஒடிசா ரயில் விபத்து உதவி எண்கள்

RailMadad தற்காலிக உதவி எண்: 044-2535 4771

சென்னை உதவி எண்கள்: 044-25330952, 044-25330953 & 044-25354771

ஹவுரா உதவி எண்: 033-26382217

காரக்பூர் உதவி எண்: 8972073925 & 9332392339

பாலசோர் உதவி எண்: 8249591559 & 7978418322

ஷாலிமார் உதவி எண்: 9903370746

தமிழ்நாடு அரசின் மாநில கட்டுப்பாட்டு மையத்தின் உதவி எண்கள்:

டோல் பிரீ எண்: 1070

செல்போன் எண்: 94458 69843

வாட்ஸ்அப் எண்: 94458 69848

லேண்ட் லைன்: 044-2859 3990

தென்மேற்கு ரயில்வேயால் அமைக்கப்பட்டுள்ள உதவி எண்கள்:

பெங்களூர் 080-22356409

பங்கார்பேட்டை: 08153 255253

குப்பம் : 8431403419

SMVB : 09606005129

KJM :+91 88612 03980

ஒடிசா அரசு 06782-262286 என்ற ஹெல்ப்லைன் எண்ணை வெளியிட்டுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.