Vijay: தந்தையின் கஷ்டத்தை உணர்ந்து செயல்படும் விஜய்..மனம்விட்டு பேசிய தளபதி..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
விஜய் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி கடந்த 30 ஆண்டுகளாகிவிட்டது. இந்த காலகட்டத்தில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த விஜய் இன்று இந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகின்றார். அதற்கு விஜய்யின் கடின உழைப்பு மிக முக்கிய காரணமாக இருந்தாலும் அவரின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஜெ சந்திரசேகரும் முதன்மை காரணமாக இருந்தார் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

ஆரம்பகாலகட்டத்தில் விஜய்யை சரியாக வழிநடத்தி அவருக்கான கதைகளை தேர்ந்தெடுத்து அவரை நடிக்கவைத்து ஒரு முன்னணி நாயகனாக விஜய்யை உருவாக்க போராடினார் எஸ்.ஏ சந்திரசேகர். என்னதான் விஜய் நடிகராவது அவருக்கு பிடிக்கவில்லை என்றாலும் விஜய்யின் விருப்பத்திற்கு ஏற்ப அவரை நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகம் செய்தார் எஸ்.ஏ சந்திரசேகர்.

உறுதுணையாக இருக்கும் எஸ்.ஜெ சந்திரசேகர்

அதன் பின் விஜய்க்கு சினிமாவின் மீது இருக்கும் ஆர்வத்தை பார்த்த எஸ்.ஏ சந்திரசேகர் தொடர்ந்து அவரை வைத்து படங்களை எடுத்து அவரை ரசிகர்கள் மனதில் ஹீரோவாக இடம்பெற செய்தார். என்னதான் தற்போது விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகருக்கும் மனஸ்தாபம் இருந்தாலும் தந்தையின் மீது தனி மரியாதையும், அன்பும் வைத்திருக்கின்றார் விஜய்.

Suriya: மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் சூர்யா ? படத்தின் கதை இதுதானாம்..எப்போ ஷூட்டிங் தெரியுமா ?

அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு தகவல் தான் தற்போது வந்துள்ளது. அதாவது பொதுவாக விஜய் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகிவிட்டால் அதன் பின் கதையில் எந்த மாற்றத்தையும் கூறமாட்டார். படத்தில் நடிப்பதற்கு முன்பு பல கேள்விகள் இருந்தாலும் அதையெல்லாம் இயக்குனர்களிடம் கூறி இதை மாற்றினால் நன்றாக இருக்கும் என விஜய் கூறுவாரே தவிர, படத்தில் கமிட்டான பின்பு இயக்குனர் சொல்வதை தான் கேட்டு நடிப்பார் விஜய்

மனம்விட்டு பேசும் விஜய்

இது தற்போது இவர் நடித்து வரும் லியோ படம் வரைக்கும் தொடர்ந்து வருகின்றது. இந்நிலையில் விஜய் இவ்வாறு நடந்துகொள்வதற்கு அவரின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் தான் காரணமாம். தன் தந்தையும் ஒரு இயக்குனர் என்பதால் சிறு வயதில் அவர் பட்ட கஷ்டத்தை இன்றளவும் விஜய் மறக்காமல் இருக்கின்றார்.

ஒரு படத்தை எடுத்து முடிப்பதற்குள் ஒரு இயக்குனர் படும் கஷ்டத்தை தன் தந்தையின் வழியாக பார்த்த விஜய் இயக்குனருக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என முடிவெடுத்தாராம். எனவே தான் இயக்குனருக்கு எந்த பிரச்சனையும் கொடுக்காமல் அவருக்கு ஒத்துழைப்பாக இன்றளவும் இருந்து வருகின்றார் விஜய்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இதன் காரணமாக தான் தற்போது பல இளம் இயக்குனர்களின் இயக்கத்தில் விஜய்யால் நடிக்க முடிகின்றது. இந்த விஷயத்தை விஜய் பல இயக்குனர்களிடம் மனம்விட்டு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.