”பிபர்ஜாய் சூறாவளியால் ஏற்படும் பாதிப்பை சமாளிக்க முப்படைகளும் தயார்…” – அமைச்சர் ராஜ்நாத் சிங்…!

பிபர்ஜாய் சூறாவளியால் ஏற்படும் பாதிப்பை சமாளிக்க முப்படைகளின் தயார் நிலை குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு மேற்கொண்டார்.

மீட்பு பணிகளுக்கு முப்படைகளின் குழுக்கள் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். பிபர்ஜாய் புயல், நாளை பிற்பகல் குஜராத்தின் மாண்ட்வி – பாகிஸ்தானின் கராச்சி இடையே கரையைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குஜராத் கடலோர பகுதிகளில் வசித்துவந்த சுமார் 50 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் கட்ச் பகுதியில் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்காக மாண்ட்வியில் உள்ள சுவாமிநாராயண் கோவிலில் உணவுகள் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.