சென்னை சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது உடல்நிலை சரியில்லாமல் அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. இன்று இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவின் மீதான விசாரணையின் போது வழக்கின் […]