அரசு ஊழியர்களுக்கு இன்னைக்கே சம்பளம்… பிகார் அரசு செஞ்ச சர்ப்ரைஸ் ஏற்பாடு!

பக்ரீத் பண்டிகை விடுமுறையை எதிர்நோக்கி அரசு ஊழியர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர். இதற்கான விடுமுறை நாளை (ஜூன் 28 – வியாழன்) வருகிறது. இடையில் வெள்ளி மட்டும் விடுப்பு எடுத்து கொண்டால் மொத்தம் 4 நாட்கள் வரிசையாக விடுமுறை கிடைத்து விடும். இதை பக்காவாக பிளான் போட்டால் சிறப்பாக கொண்டாடி தீர்த்துவிடலாம் என்ற கனவில் பலரும் இருக்கின்றனர்.

அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி

இந்நிலையில் அரசு ஊழியர்களின் மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒரு விஷயத்தை பிகார் மாநில அரசு செய்துள்ளது. வழக்கமாக மாதத்தின் கடைசி நாளன்று சம்பளம் போடப்படும். சில சமயங்களில் 29ஆம் தேதி கூட வந்துவிடும். அப்படி பார்த்தால் நாளை (ஜூன் 29) விடுமுறை நாளாக அமைந்துவிட்டது. எனவே இன்றே செய்துவிட்டால் என்னவென்று அரசு ஆலோசனை செய்தது.

நிதியமைச்சர் விஜய் குமார் சவுத்ரி நடவடிக்கை

அதை நிறைவேற்றியும் காட்டியுள்ளது. இதுதொடர்பாக பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் உடன் நிதியமைச்சர் விஜய் குமார் சவுத்ரி முக்கிய ஆலோசனை நடத்தினார். அவரது ஒப்புதலின் பேரில் நிதியை விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 10 மணியில் இருந்தே அரசு ஊழியர்கள் சம்பளம் பெறத் தொடங்கிவிட்டனர்.

இன்றே சம்பளம் போட்டாச்சு

அனைவரது வங்கி கணக்குகளிலும் சம்பளம் வந்துவிட்டதை பார்த்து மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்த எதிர்பார்ப்பு அரசு ஊழியர்களிடமும் இருந்துள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் பண்டிகைக்கு முன்பாக சம்பளம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்ப்பர். அதில் இஸ்லாமிய அரசு ஊழியர்களின் பக்ரீத் பண்டிகை மட்டும் விதிவிலக்கா என்ன? அவர்கள் நினைத்தார்கள்.

இனி வரும் மாதங்களில்

பிகார் மாநில அரசு செய்து முடித்துவிட்டது. இவ்வாறு நடப்பது வழக்கமான ஒன்று தான் என்று நிதியமைச்சர் விஜய் குமார் சவுத்ரி தெரிவித்திருக்கிறார். இனி வரும் மாதங்களில் மாதத்தின் கடைசி நாளில் தான் சம்பளம் போடப்படும் என்ற விஷயத்தையும் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.