ரேஷன் கார்டுக்கு வந்த புது அப்டேட்… இலவச அரிசிக்கு பதில் காசு… ரூட்டை திரும்பிய கர்நாடகா!

கர்நாடகா மாநிலத்தில் கடந்த மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. அதன்பிறகு முதலமைச்சராக சித்தராமையா, துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். காங்கிரஸ் வெற்றி பெற தேர்தல் வாக்குறுதிகளும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. அதுவும் 5 பிரதான வாக்குறுதிகள் கர்நாடகா மக்களை பெரிதும் ஈர்த்தது.

சிக்கலில் அன்ன பாக்யா திட்டம்அதில் அன்ன பாக்யா என்ற பெயரில் BPL எனப்படும் வறுமை கோட்டிற்கு கீழுள்ள மக்கள் வைத்திருக்கும் ரேஷன் கார்டுகளுக்கு 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக இந்திய உணவு கழகத்தின் உதவியை கர்நாடகா அரசு நாடியிருந்தது. ஆனால் அவர்கள் போதிய அளவில் அரிசியை வழங்க மறுத்துவிட்டனர். இதையடுத்து மத்திய அரசின் பல்வேறு ஏஜென்சிகளிடம் கோரிக்கை விடுத்தது.BPL ரேஷன் கார்டுகளுக்கு அப்டேட்இருப்பினும் பலன் கிடைக்கவில்லை. இந்த சூழலில் தான் அரிசிக்கு பதிலாக பணமாக கொடுக்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. மார்க்கெட்டில் 5 கிலோ அரிசி எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறதோ, அதே தொகை வழங்கப்படும். இதற்காக மாதந்தோறும் 750 முதல் 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. BPL ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் மாதம் ஒன்றுக்கு தலா 170 ரூபாய் வழங்கப்படும்.
​ஜூலை முதல் அமல்இந்த திட்டம் வரும் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வருகிறது. அதாவது, குறிப்பிட்ட அளவு தொகை நேரடியாக ரேஷன் கார்டுதாரர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும். இதுதொடர்பாக பேசிய முதலமைச்சர் சித்தராமையா, அரிசியை மறுத்துவிட்டு மத்திய அரசு எங்களிடம் அரசியல் செய்வதாக குற்றம்சாட்டினார். எங்களின் திட்டத்தை செயல்படுத்த விடாமல் தடுத்து நிறுத்த பார்க்கிறது.​பணமாக கொடுக்க முடிவுஎனவே தான் அரிசிக்கு பதிலாக பணம் கொடுக்க முடிவு செய்துள்ளோம். ஒரு BPL குடும்பத்தில் 4 பேர் இருந்தால் அவர்களுக்கு 1,704 ரூபாய் வழங்கப்படும் என்றார். மேலும் சட்டத்துறை அமைச்சர் கே.ஹெச்.பட்டில் பேசுகையில், மத்திய அரசு எங்களை ஏமாற்றி விட்டது. எனவே மாற்று யோசனையை முன்னெடுத்துள்ளோம். பணமாக கொடுத்துவிட்டால் தேவைப்படும் உணவு தானியங்களை அவர்களாகவே வாங்கி கொள்ளலாம்.
சமூக ஆர்வலர்கள் விமர்சனம்இது நிரந்தமான தீர்வு அல்ல என்று எங்களுக்கு தெரியும். தற்காலிக தீர்வு மட்டுமே. அரிசியை கொள்முதல் செய்ய டெண்டர் கோரும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளோம் என்று கூறினார். இவ்வாறு ரொக்கமாக வழங்கும் முறை ஆரோக்கியமான நடவடிக்கை இல்லை என்ற பார்வையை சமூக ஆர்வலர்கள் சிலர் முன்வைக்கின்றனர்.
வரப் போகும் சிக்கல்கள்ஏனெனில் அரிசி என்ற அத்தியாவசிய தேவைக்காக வழங்கப்படும் தொகை, அதற்காக தான் சரியாக பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. ஒருவேளை வேறு தேவைக்காக பயன்படுத்தினால் உணவு தேவையை எப்படி பூர்த்தி செய்வர்? மேலும் அரசு வழங்கும் அரிசிக்கு இணையாக வெளி சந்தையில் அரிசியை வாங்க முடியுமா என்பதும் கேள்விக்குறியாகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.