யானையிடம் ஆசிபெற்ற தமிழிசை | குடியிருப்பில் ஏற்பட்ட விரிசல்| தக்காளி விலையேற்றம் – News in Photos

கன்னியாகுமரி:

நாகர்கோவில் வடசேரியில் புதிதாக புனரமைக்கப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக திறந்துவைத்த பூமாலை வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அரங்குகளைப் பார்வையிடும் பெண்கள்.

கன்னியாகுமரி:

ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கன்னியாகுமரி:

வளைகுடா நாடுகளில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, நாகர்கோவில் இளங்கடை பகுதியில் பக்ரீத் தொழுகையில் ஈடுபட்ட மக்கள்.

சென்னை:

கண்ணகி நகர் குடியிருப்பில் தோண்டப்பட்ட பள்ளம் காரணமாக, அங்குள்ள குடியிருப்பில் ஏற்பட்ட விரிசலால் அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்திருக்கின்றனர்.

தேனி:

சந்தையில் பதினைந்து கிலோ எடைகொண்ட தக்காளிப்பெட்டி, விலையேற்றத்தால் தற்போது 1,200 ரூபாய் வரை விற்பனையாகிறது.

விழுப்புரம்:

துரிதமாக நடைபெற்றுவரும் விழுப்புரம் – புதுச்சேரி பைபாஸ் சாலை மேம்பாலப் பணிகள்.

விழுப்புரம்:

அ.தி.மு.க மாவட்ட அலுவலகத்தில் எம்.பி., சி.வி.சண்முகம் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

விழுப்புரம்:

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக திறந்துவைத்த புனரமைக்கப்பட்ட விழுப்புரம் பூமாலை வணிக வளாகத்தில், மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரிப்பு பொருள்களின் முதல் விற்பனை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

கோயம்புத்தூர்:

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், முதல்வருக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி சென்றனர்.

திருநெல்வெலி:

நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம் செய்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை, கோயிலிலுள்ள காந்திமதி யானையிடம் ஆசிபெற்றார்.

திருநெல்வேலி:

நெல்லையப்பர் திருக்கோயில் ஆனித் திருவிழா ஐந்தாம் நாளையெட்டி சாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் சாமி புறப்பாடு நடைபெற்றது.

திருநெல்வெலி:

பாளையங்கோட்டையில் மத்திய மாவட்ட தி.மு.க., புதிய அலுவலகத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்துவைத்தார்.

திருநெல்வெலி:

மத்திய தரைவழி மற்றும் விமானப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் செய்தியாளர் சந்திப்பு பா.ஜ.க.,மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

வேலூர்:

மாவட்டத் திட்டக்குழுக் கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

புதுச்சேரி:

ஊரல் வாய்க்காலை ஆழப்படுத்தும் பணியை ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நூறு நாள் வேலைத் திட்டத்தின்கீழ் பணியாற்றும் பணியாளர்கள் மூலம் சபாநாயகர் செல்வம் தொடங்கிவைத்தார்.

புதுச்சேரி:

ஊடகவியலாளர்களுக்கு நடைபெற்ற கருத்தரங்கில் டாக்டர்.அஸ்வனி குமார் பேசினார்.

ஈரோடு:

பெரிய சேவூர் பொன்னி நகரிலுள்ள செல்ல மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி பக்தர்கள் குண்டத்தில் இறங்கினர்.

ஈரோடு:

கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் சுதர்சன ஹோமத்தை முன்னிட்டு சக்கரத்தாழ்வாருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

ஈரோடு:

தூய்மைப் பணியைத் தனியாருக்கு ஒப்பந்தம் செய்வதைக் கண்டித்து, தூய்மைப் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு:

மாவட்டத் திட்டக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு மற்றும் அறிமுகக் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

தஞ்சாவூர்:

பழைய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பூட்டுப்போடும் போராட்டம் நடைபெற்றது.

விருதுநகர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் செப்புத் தேரோட்டம் நடைபெற்றது.

மதுரை:

கூடலழகர் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலயம் நடைபெற்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.