திருவனந்தபுரம்: கேரளாவில் 50 ஆயிரம் பேருக்கு வாந்திபேதி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் வரை டெங்கு ,புளூ காய்ச்சல் மக்களை பெரும் அளவில் வாட்டிவதைத்தது. இந்நிலையில் நடப்பு ஜூன் மாதத்தில் இதுவரை வாந்திபேதியால் 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வாரத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் பாதிப்புக்குள்ளாகினர். பல அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் பெருகி வழிகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement