டைட்டன் நீர்மூழ்கி கப்பல்: சிதறிய உடல்கள்.. மிஞ்சிய எச்சங்கள் மீட்பு.. அமெரிக்க கடலோர காவல்படை திடுக்!

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்த டைட்டானிக் சொகுசு கப்பல் பனிப் பாறையில் மோதி கடலில் மூழ்கியது. கடலுக்கு அடியில் கிடக்கும் இந்த டைட்டானிக் கப்பலை காண கடந்த 18 ஆம் தேதி 5 பேர் கொண்ட குழு ஓஷன் கேட் என்ற நீர்மூழ்கி கப்பலில் சென்றது.

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
நீர்மூழ்கி கப்பல் புறப்பட்ட சில மணி நேரங்களில் அனைத்து தொடர்புகளையும் இழந்தது. இதையடுத்து நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியில் அமெரிக்க கடலோர காவல் படை மற்றும் கனேடிய விமான படை ஈடுபட்டது. மேலும் சத்தத்தை பகுப்பாய்வு செய்யும் சோனார் மிதவைகள் மற்றும் ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டன.

திருப்பதி பக்தர்களே.. நீங்க நம்பாட்டாலும் இதான் நிஜம்… வெறும் 3 மணி நேரம்தான்!

ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியதை உறுதி செய்தது அமெரிக்க கடலோர காவல்படை. வடக்கு அட்லாண்டிக் கடலில் ஓஷன் கேட் நீர்மூழ்கி கப்பலின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதில் இருந்த 5 பயணிகளும் உயிரிழந்து விட்டதாகவும் அறிவித்தது.

உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்தது. இந்நிலையில் டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் சிதைந்த பாகங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. மேலும் மீட்கப்பட்ட அந்த சிதைந்த பாகங்களில் மனித உடல்களின் எச்சங்கள் ஒட்டிக் கொண்டு இருப்பதாகவும் அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

அடித்து வெளுக்கும் மழை… வெள்ளக்காடான மும்பை… பயங்கர ட்ராஃபிக்கால் திணரும் மக்கள்!

டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் பாகங்கள் கடலுக்கு அடியில் 12,000 அடி ஆழத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. நீர்மூழ்கி கப்பலின் பாகங்கள் கடலுக்குள் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பல் சிதைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 1,600 அடி தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டுள்ள டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் சிதைந்த பாகங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும் அமெரிக்கா கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

நீர்மூழ்கி கப்பலின் சிதைந்த பாகங்கள் மனித எச்சங்கள் ஒட்டியிருப்பதாக அமெரிக்க கடலோர காவல்படை கூறியிருப்பது, விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகளை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வெடித்து சிதறிய Ocean Gate நீர்மூழ்கி கப்பலில் அந்நிறுவனத்தின் தலைவர், 61 வயதான ஸ்டாக்டன் ரஷ், பிரிட்டன் பணக்காரர்களில் ஒருவரான 58 வயது ஹமிஷ் ஹார்டிங், 48 வயதான ஷாஜதா தாவூத், அவரது 19 வயது மகன் சுலைமான் தாவூத் மற்றும் 77 வயதான பிரெஞ்சு ஆழ்கடல் நீச்சல் வீரர் பால்-ஹென்றி நர்கோலெட் ஆகியோர்பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொட்டப்போகும் மழை… ஃபர்ஸ்ட் பவர்பிளே ஆரம்பம்… இன்னையிலேருந்து சென்னைக்கு செம்ம சான்ஸாம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.