தியாகத் திருநாளாம் புனித ஹஜ் பெருநாள் இன்றாகும்.
உலகளாவிய இஸ்லாமிய மக்களுடன் இணைந்து இலங்கை வாழ் இஸ்லாமியர்களும் இன்று புனித ஹஜ்ஜுப் பெருநாளை சிறப்பாக கொண்டாடுகின்றனர். ஹஜ் பண்டிகையை முன்னிட்டு News.lk தமிழ் செய்திப் பிரிவு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று (29) காலை சிறப்பு பெருநாள் தொழுகை மற்றும் பிரார்த்தனைகள் இடம்பெறுகின்றன. இறை தூதர்களில் ஒருவரான இப்றாஹீம் நபி அவர்களும் அவரது குடும்ப உறுப்பினர்களும் இறைவனுக்காக மேற்கொண்ட பெரும் அர்ப்பணிப்புகளை நினைவுக்கூர்ந்து உலகவாழ் முஸ்லிம்கள் மிகுந்த பக்தியுடன் மகிழ்ச்சியுடனும் இத்திருநாளை கொண்டாடுகின்றனர்.
இக்காலப்பகுதியிலேயே உலகெங்கிலுமிருந்தும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களின் ஒன்றான ஹஜ் கடமைக்காக மக்காவில் ஒன்றுகூடி ஹஜ் வழிபாடுகளில் ஈடுபடுவது இத் தினத்தின் விசேட அம்சமாகும்.
இத் தினத்தில் ஹஜ் சிறப்புத் தொழுகையை நிறைவேற்றிய பின்னர் உழ்ஹிய்யா கடமையையும் நிறைவேற்றுவார்கள்.