எதிர்நீச்சல் சீரியலிலிருந்து விலகிய மது கார்த்திக்
எதிர்நீச்சல் தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த தொடரில் நடித்து வந்த மது கார்த்திக் சீரியலை விட்டு விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்நீச்சல் தொடரில் எஸ்.கே.ஆர் கதாபாத்திரத்தின் கடைசி தம்பியாக நடித்து வந்த மது கார்த்திக் தன்னுடைய கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்று சீரியலை விட்டு விலகியுள்ளார். இதுவரை ஒளிபரப்பான எபிசோடுகளில் மது கார்த்திக் நடித்துள்ள காட்சி ஒன்றோ இரண்டோ மட்டுமே. இதன் காரணமாக தான் மது கார்த்திக் தொடரிலிருந்து விலகியிருப்பார் என பரவலாக பேச்சு அடிப்பட்டு வருகிறது.