Five people were killed when a lorry rammed into a wedding procession | திருமண ஊர்வலத்தில் லாரி புகுந்து ஐவர் பலி

கியோஞ்கர்,
ஒடிசாவின் கியோஞ்கர் மாவட்டத்தில் உள்ள மான்பூர் கிராமத்தின் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை திருமண ஊர்வலம் சென்று கொண்டிருந்தது.

இதில் திடீரென லாரி ஒன்று புகுந்தது. இந்த விபத்தில் மணமகனின் உறவினர் ஒருவர், மணமகளின் உறவினர்கள் மூவர் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் இருவர் நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

விபத்து ஏற்படுத்திய லாரியை போலீசார், 3 கி.மீ., துாரத்திற்கு விரட்டி சென்று மடக்கி டிரைவரை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.