“அவரது அக்கறை நன்று!” – டெல்லி வெள்ளம் குறித்த பிரதமர் மோடியின் விசாரிப்பை விமர்சித்த காங்கிரஸ்

புதுடெல்லி: டெல்லியின் வெள்ள பாதிப்புகள் குறித்து பிரான்ஸில் இருந்து தொலைப்பேசி வழியாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் விசாரித்த பிரதமர் மோடியை, "அவர் அக்கறைக் காட்டியது நல்லது" என்று காங்கிரஸ் கட்சி என்று விமர்சித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பாரிஸில் இருக்கும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சரை தொலைப்பேசியில் அழைத்து டெல்லியின் வெள்ள நிலவரம் குறித்து விசாரித்துள்ளார். அவர் இவ்வளவு அக்கறை காட்டுவது நல்லதுதான். ஆனால் இதேபோல அவர் அமெரிக்கச் சென்றிருந்தபோது மணிப்பூர் பற்றி எரிந்தது குறித்து ஏன் அழைத்து விசாரிக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.