நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸாகிறது. அந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராஃப், மெகா குடும்பத்தை சேர்ந்த நாகேந்திர பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…
ரஜினி படத்தில் எதற்காக இவ்வளவு கூட்டம். தலைவர் படத்தை தாங்க வேறு யாரும் தேவையில்லை, அவரே போதும். இந்த நெல்சன் திலீப்குமார் ஏன் பிற மொழி பிரபலங்களை நடிக்க வைத்திருக்கிறார் என ரசிகர்கள் சிலர் எரிச்சல் அடைந்தார்கள்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
பிற மொழி பிரபலங்களை நடிக்க வைத்தது நெல்சன் திலீப்குமார் ஐடியா இல்லை, ரஜினிகாந்த் ஐடியா ஆகும். இது மல்டி ஸ்டாரர்களின் காலம். காலத்திற்கேற்ப மாற வேண்டும். அப்பொழுது தான் ஜெயிக்க முடியும் என நெல்சன் திலீப்குமாரிடம் கூறியதே ரஜினி தானாம்.
மோகன்லாலுக்காக கேரளா ரசிகர்களும், சிவராஜ்குமாருக்காக கன்னட ரசிகர்களும், ஜாக்கி ஷ்ராஃபுக்காக இந்தி ரசிகர்களும், நாகேந்திர பாபுவுக்காக தெலுங்கு ரசிகர்களும் ஜெயிலர் படம் பார்க்க வருவார்கள் என்பதே ரஜினியின் கணக்காம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தை பார்த்த பிறகே மல்டி ஸ்டாரர் பக்கம் ரஜினியின் கவனம் சென்றிருக்கிறது. தான் மட்டுமே படத்தை தோளில் தாங்க வேண்டியது இல்லை. உதவிக்கு ஆட்களை அழைப்பதில் தவறு இல்லை என்று நினைக்கிறாராம் ரஜினி.
Jawan: சம்பளமே கொடுக்காவிட்டாலும் ஜவானில் நடித்திருப்பேன், ஏன்னா…: விஜய் சேதுபதி
ரஜினியின் கணக்கு நிச்சயம் தப்பாகாது என்றே நம்பப்படுகிறது. இந்நிலையில் ஜெயிலர் படத்தில் வரும் ஹுகும் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி தலைவர் ரசிகர்களை ஆனந்த கண்ணீர்விட வைத்திருக்கிறது.
பாடலில் வரும் உங்கப்பன் விசில கேட்டவன் என்கிற வரி ரஜினி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. எத்தனை தலைமுறைகள் வந்தாலும் தலைவர் மட்டுமே சூப்பர் ஸ்டார் என்பது இப்போ புரிகிறதா என்கிறார்கள்.
ஜெயிலர் படத்திற்கு இசையமைத்திருக்கும் அனிருத் தான் ஹுகும் பாடலை பாடியிருக்கிறார். அவர் தலைவர் வெறியன் என்பதால் ஹுகும் பாடலுக்கான இசை வேற லெவலில் வந்திருக்கிறது என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
முன்னதாக வெளியான காவாலா பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அந்த பாடல் வெளியானதில் இருந்து இன்ஸ்டாகிராமில் திரும்பும் பக்கம் எல்லாம் காவாலா ரீல்ஸ் தான். தமன்னா போன்று ஆடி வீடியோ எடுத்து அதை பலரும் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து வருகிறார்கள்.
காவாலா பாடலுக்கு சரியாக நடகக்கக் கூட தெரியாத குழந்தைகள் எல்லாம் டான்ஸ் ஆடியிருக்கிறார்கள். அந்த வீடியோக்களை பார்த்து க்யூட், ஸ்வீட் என்று உருகிக் கொண்டிருக்கிறார் தமன்னா.
ஜெயிலர் பாடல் வெளியான பிறகு தமன்னாவை காவாலா கேர்ள் என்றே ரசிகர்கள் அன்புடன் அழைக்கிறார்கள். இந்நிலையில் ஜூலை 28ம் தேதி நடக்கவிருக்கும் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசுவதை கேட்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.
ஜெயிலர் திருவிழாவை கொண்டாட ரஜினி ரசிகர்கள் ஏற்கனவே தயாராகிவிட்டார்கள்.