பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இன்று (20) காலியில் நடைபெற்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது.

கடைசி நாளான இன்று ஆட்டம் தொடங்கும் போது பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 48 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில்இ இன்று 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்துள்ளது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 312 ஓட்டங்களைப் பெற்றது. அங்கு தனஞ்சய டி சில்வா 122 ஓட்டங்களையும்இ ஏஞ்சலோ மெத்திவ்ஸ் 64 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸிற்காக 461 ஓட்டங்களைப் பெற்றதுடன்இ பாகிஸ்தான் அணிக்காக சௌத் ஷகீல் ஆட்டமிழக்காமல் 208 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் இலங்கை தரப்பில் ரமேஷ் மெண்டிஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணியால் 279 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது. அதன்படி பாகிஸ்தானின் அணி 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

இதன்படி 3 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.