70 ஆயிரம் பேருக்கு மத்திய அரசு பணி: இந்தியாவின் வங்கித் துறை வளர்ச்சி – மோடி பெருமிதம்!

உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. மக்கள் தொகை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு மக்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது அரசின் கடமை.

மத்திய அரசின் ரோஜ்கர் மேளா திட்டத்தின் மூலம் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பணி வழங்குவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி தொடங்கி வைத்த பிரதமர் மோடி அன்றைய தினம் 75, 226 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

சிவ்தாஸ் மீனா மீண்டும் எடுத்த டிரான்ஸ்பர் ஆயுதம்: இந்த முறை மொத்தம் நான்கு பேர்!

அதன்பின்னர் அவ்வப்போது சில ஆயிரம் பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வந்தன. இந்த திட்டத்தின் கீழ் 4,30,000 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 70 ஆயிரம் பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

காணொலி காட்சி மூலம் 70 ஆயிரம் பேருக்கு பணி ஆணைகள் வழங்கி சிறப்பித்தார்.

அத்துடன் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “உலகளவில் இந்திய வங்கித்துறை வலுவாக உள்ளது. வங்கிகள் கட்டமைப்பில் உலகில் உள்ள பல நாடுகளில் இந்தியா முன்னணி நாடாக திகழ்கிறது.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன் குறிப்பிட்ட ஒரு குடும்பத்திற்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே கடன்கள் கிடைத்தன. கடந்த ஆட்சியில் நமது நாட்டின் வங்கித்துறை அழிவை சந்தித்தது. ஆனால் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய முடிகிறது.

அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு மிக முக்கியமான ஆண்டுகளாக இருக்கும். வளர்ச்சியின் பாதையில் நாடு சென்று கொண்டு இருக்கும் போது, அரசின் ஊழியராக இருப்பது நல்ல வாய்ப்பு,” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.