மணிப்பூரில் தொடர் வன்முறை சம்பவங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இரு சமூகங்களுக்கு இடையிலான இட ஒதுக்கீட்டு பிரச்சினை ஆனது தாக்குதல், தீவைப்பு, கொலை, பாலியல் வன்கொடுமை என விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த நாடும் பெரிதும் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறது.
3 மாதங்களுக்கு பின் அனுமதி
இதற்கிடையில் வதந்திகள் பரவக்கூடாது என இணைய சேவை துண்டிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் வெளியான மணிப்பூர் வீடியோ நெஞ்சை பதற வைத்தது. இதை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில் அரசு 3 மாதங்களுக்கு பின்னர் மணிப்பூரில் இணைய சேவை பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், கடந்த 03.05.2023 முதல் மணிப்பூரில் இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இணைய சேவையால்
இதனால் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வீட்டிலிருந்து வேலை செய்வோர், சி.ஏ நிறுவனங்கள், வழக்கறிஞர்கள், சுகாதார வசதிகள், எரிபொருள் நிரப்பும் மையங்கள், மின்சார சார்ஜிங் வசதிகள், எல்.பி.ஜி சிலிண்டர் புக்கிங், வரி தொடர்பான அலுவலகங்கள், ஆன்லைன் வாயிலான குடிமக்கள் பயன்படுத்தும் சேவைகள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டிருந்தன. இந்த சூழலில் நிபந்தனைகள் உடன் இணைய சேவைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி,
மீண்டும் அனுமதி
மொபைல் இணைய சேவைக்கு தொடரும் தடை
மேற்குறிப்பிட்ட விதிமுறைகளை மீறும் நபர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மணிப்பூர் மாநில அரசு தெரிவித்துள்ளது.