கட்டிப்புரண்டு சண்டையிட்ட மாமியார் – மருமகள்.. ஜாலியாக வீடியோ எடுத்து பதிவிட்ட கணவன்.. "யாரு ப்ரோ நீ"

அலிகர்:
மாமியாரும், மருமகளும் முடியை பிடித்து இழுத்து சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட கணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குடும்பத்தில் மாமியார் – மருமகள் இடையே சண்டை வருவது சகஜமானது தான். ஆனால், அப்படி சண்டை வரும் போது மகனின் பாடுதான் கஷ்டம். அம்மாவுக்கும் சப்போர்ட் செய்ய முடியாமல், மனைவிக்கும் சப்போர்ட் செய்ய முடியாமல் இடையில் கடந்து அல்லாடுவது என்னவோ அவர்கள்தான். ஆனால், தனது தாயும், மனைவியும் வெறித்தனமாக சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது அதை தடுக்கக் கூட செய்யாமல் வீடியோ எடுத்து பதிவிட்டிருக்கிறார் இளைஞர் ஒருவர்.

உத்தரபிரதேச மாநிலம் அலிகரை சேர்ந்தவர் அர்விந்த் குமார். இவருக்கும் ப்ரீத்தி தேவி என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கின்றன. இதனிடையே, ப்ரீத்தி தேவி ஆண் குழந்தை பெறாததால் அவரது மாமியாரான ராணி தேவி அவரை அடிக்கடி திட்டி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

பாம்புக்கு பால் வார்த்திருக்கீங்களே! தாத்தா – பாட்டியின் தலையை வெட்டி விளையாடிய கொடூரப் பேரன்!

இந்நிலைியல், நேற்று முன்தினம் ப்ரீத்தி தேவியிடம் மாமியார் ராணி தேவி இதுகுறித்து கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறியது. மாமியாரும், மருமகளும் ஒருவரின் ஒருவரின் முடியை பிய்த்துக் கொண்டு கட்டிப்பிடித்து சண்டையிட்டனர். இதை பார்த்து ப்ரீத்தி தேவியின் குழந்தை பயத்தில் அலறிக் கொண்டிருக்கிறது.

ஆனால், ப்ரீத்தி தேவியின் கணவன் அர்விந்த் குமார், சண்டையிடும் தனது தாயையும், மனைவியையும் பிரித்து விடாமல் அதை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். மேலும், கிரிக்கெட்டில் வருவது போல ரன்னிங் கமெண்ட்ரியும் செய்துள்ளார். இதையடுத்து, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட, அது தீயாக பரவி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலர், அம்மாவும், மனைவியும் சண்டையிட்ட போது வீடியோ எடுத்து பதிவிட்ட அர்விந்த் குமார் “மிஸ்டர் கூல் ஹஸ்பண்ட்” என கிண்டலான தொனியில் பாராட்டி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.