என்னுடைய முதல் ஸ்பெஷலான புடவை – அனிதா சம்பத்
சின்னத்திரை பிரபலமான அனிதா சம்பத், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடி கலக்கினார். தற்போது திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் அவர், மாடலிங்கும் செய்து வருகிறார். அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அனிதா சம்பத், தனது 18 வருட சென்ட்டிமெண்ட் குறித்த பதிவை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் முக்கியமான தருணங்களில் ஒன்று பூப்படைவது. அவ்வாறு அனிதா சம்பத் பூப்படைந்த போது சடங்கு நிகழ்ச்சிக்காக எடுக்கப்பட்ட புடவையை அனிதா பத்திரமாக பாதுகாத்து வருகிறார். தற்போது அந்த புடவையை கட்டி போஸ் கொடுத்துள்ள அனிதா, சடங்கு நிகழ்ச்சியின் போது சிறுவயதாக அதே புடவையுடன் எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டு, 'என்னுடைய முதல் மற்றும் ஸ்பெஷலான புடவை' என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.