இதுக்கு பேர்தான் அதிர்ஷ்டம்.. ரூ.10 கோடியை தட்டி தூக்கிய துப்புரவு பணியாளர்கள்!

கேரளாவில் அரசு சார்பில் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பண்டிகை நாட்களில் பம்பர் பரிசாக பெரிய தொகையில் ஸ்பெஷல் விற்பனையும் நடைபெற்று வருகிறது. கேரள லாட்டரி சீட்டுக்களை அம்மாநில மக்கள் மட்டுமின்றி வெளி மாநில மக்களும் சென்று வாங்கி பயன்பெற்று வருகின்றனர்.

லாட்டரி சீட்டு வாங்குவதற்காக தமிழகத்தில் இருந்து பலர் கேரளா சென்று வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் 2023 ஆம் ஆண்டுக்கான மான்சூன் பம்பர் பரிசாக 10 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக 27 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டு ஒரு டிக்கெட் 250 ரூபாய் என அறிவிக்கப்பட்டிருந்தது.

வெற்றி கிடைக்கும் வரை என்எல்சிக்கு எதிரான போராட்டம் தொடரும்… ராமதாஸ் அதிரடி!

இந்த பம்பர் லாட்டரி சீட்டு குலுக்கல் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்றது. இதில் எம்.பி. 200261 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு 10 கோடி ரூபாய் விழுந்தது. பாலக்காட்டில் விற்பனையான அந்த லாட்டரி சீட்டை வாங்கியது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் அந்த லாட்டரி சீட்டை பெண் துப்புரவு பணியாளர்கள் 11 பேர் சேர்ந்து வாங்கியது தெரியவந்தது.

250 ரூபாய் மதிப்புள்ள அந்த லாட்டரி சீட்டை 11 பெண் துப்புரவு பணியாளர்கள் ஷேர் செய்து வாங்கியது தெரியவந்துள்ளது. மலப்புரம் மாவட்டம் பரப்பனகாடி நகராட்சியில் துப்புரவு பணியாளர்களாக பணிபுரிந்து வரும் அவர்களில் 9 பேர் 25 ரூபாயும் ஒருவர் 50 ரூபாயும் ஷேர் செய்து லாட்டரி சீட்டை வாங்கியுள்ளனர்.

தனுஷ் பட நடிகையா இவர்… கிளாமர் லுக்கில் மெஹ்ரீன் பிர்சாடா!

அந்த லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்து ஒரு நொடியில் அவர்களின் வாழ்க்கையை மாற்றி விட்டது. 10 கோடி ரூபாய் லாட்டரியில் விழுந்ததால் ஆனந்தத்தில் திக்குமுக்காடிப் போயுள்ளனர் அந்த பெண் துப்புரவு பணியாளர்கள். இதனைக் கேட்ட நெட்டிசன்கள், இதற்கு பெயர்தான் அதிர்ஷ்டம், அவர்களே நினைத்துப் பார்க்காத அளவுக்கு அவர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என வாழ்த்து கூறி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.