என்எல்சி விவகாரம்: பயிரை அழித்தபோது அழுகை வந்தது… உயர்நீதிமன்ற நீதிபதி உருக்கம்!

கடலுர் மாவட்டம் வளையமாததேவியில் என்எல்சி விரிவாக்க பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக கனரக வாகனங்களை நிலங்களில் இறக்கி பயிர்களை அழித்து என்எல்சி நிறுவனத்திற்கான கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இதற்கு அப்பகுதி விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் என்எல்சி நிர்வாகம் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதற்கு தடைவிதிக்கக் கோரி தொடர்ந்த அவசர வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, என்எல்சி நிர்வாகத்துக்கும், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறிம்மு ஆகஸ்ட் 3ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி தண்டபாணி உத்தரவு பிறப்பித்தார். பின்னர் என்எல்சி நிர்வாகத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் கனரக வாகனங்களை இறக்கி பயிர்கள் அழிக்கப்பட்டது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.

நாசமா போயிருவ இது கருவை அழிக்கிறதுக்கு சமம் கொந்தளித்த அன்புமணி

அதற்கு பதில் அளித்த என்எல்சி நிர்வாகம், 20 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு 3 மடங்கு அதிகமாக பணம் வழங்கிவிட்டதாகவும் தற்போது நிலத்தை சுவாதீனம் எடுக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 20 ஆண்டுகளாக சுவாதீனம் எடுக்காமல் இருந்த என்எல்சிக்கு, அறுவடை 2 மாதங்கள் காத்திருக்க முடியாத என கேள்வி எழுப்பினார்.

மேலும் நெற்பயிர்களை புல்டோசரால் அழித்தபோது தனக்கு அழுகை வந்ததாக வேதனையுடன் கூறிய நீதிபதி தண்டபாணி, வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலாரின் ஊருக்கு அருகிலேயே இந்த நிலைமையா என்றும் ஆதங்கப்பட்டார். நிலம் எடுப்பதற்காக பயிர்கள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது என்றும் கூறினார்.

இழப்பீடு பெற்றாலும்கூட தாங்கள் பயிரிட்ட நெற்பயிர்கள் அழிக்கப்படும்போது விவசாயிகளுக்கு கோபம் வரும்தான் என்ற நீதிபதி, அரிசி வாங்க அமெரிக்காவில் இப்போதே அலைமோதுகிறார்கள் அதுபோன்ற சூழ்நிலை நமக்கும் வரக்கூடும் என்றார். நம் காலத்திலேயே மிகப்பெரிய பஞ்சத்தை சந்திக்கப் போகிறோம் என்ற அவர், அரிசிக்கும், காய்கறிக்கும் அடித்துக்கொள்வதை பார்க்கத்தான் போகிறோம் என்றும் கூறினார். அப்போது நிலக்கரி பயன்பாடு என்றும் நீதிபதி தண்டபாணி தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.