சூப்பர் ஸ்டார் சகாப்தம் முடிந்து விட்டது: பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு பதிவு.!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. இந்தப்படத்தின் ஷுட்டிங் முழுமையாக நிறைவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகவுள்ளது. இந்தப்படத்தின் ஆடியோ லான்ச் விழா நேற்றைய தினம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் மாஸ் ஸ்பீச் கொடுத்தார். அவரின் பேச்சு சோஷியல் மீடியா முழுக்க கவனம் ஈர்த்து வருகிறது.

‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரது குடும்பத்தினர் மற்றும் சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரப், சிவராஜ்குமார், நெல்சன் திலீப்குமார், தமன்னா, அனிருத் ரவிச்சந்தர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் முழு உற்சாகத்துடன் மாஸ் ஸ்பீச் கொடுத்தார். சமீப காலமாக இணையத்தில் சர்ச்சைகளை கிளப்பி வந்த சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து வெளிப்படையாக பேசினார் ரஜினி. சூப்பர் ஸ்டார் டைட்டிலுக்கு தான் ஆசைப்பட்டது இல்லை என்றும் காகம், பருந்தை வைத்து குட்டி ஸ்டோரி ஒன்றையும் கூறியிருந்தார் ரஜினி.

அவரின் பேச்சை சோஷியல் மீடியா முழுக்க வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று இணையத்தில் பரபரப்பை கிளப்பி வருகிறது. அதில், சினிமா வர்த்தகத்தில் இருக்கும் ஒரு சூப்பர் ஸ்டார் சகாப்தம் முடிந்து விட்டது. ஒவ்வொரு நடிகருக்கும் சொந்த மார்கெட், மதிப்பு உள்ளது. படம் வெளியாகும் தேதி, கதை, போட்டி ஆகியவற்றின் மூலம் இந்த மதிப்பு மாறுபடும்.

Leo:பயங்கரம்.. வெறித்தனமான லுக்கில் சஞ்சய் தத்: மிரட்டலாய் வெளியான ‘லியோ’ கிளிம்ப்ஸ்.!

இதனை புரிந்துக்கொண்டு ஒருவரை ஒருவர் ஆதாரிக்க துவங்கும் போது ஒட்டுமொத்த சந்தையும் உயர்ந்து எல்லைகளை தாண்டி விரிவடைகிறது. இதற்கு சிறந்த உதாரணம் தெலுங்கு சினிமா. அனைத்து நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும். இதனை நடைமுறைபடுத்தும் போது இந்திய சினிமா சந்தை வியாபார ரீதியாக சிறப்பாக முன்னேறும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரபு பகிர்ந்துள்ள இந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பியுள்ளது. ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரப், சுனில் உள்ளிட்ட பல மொழிகளை சார்ந்த பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள ‘ஜெயிலர்’ படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

Jailer: ரஜினியிடமிருந்து மைக்கை வாங்கி பேசிய ரம்யா கிருஷ்ணன்: அரங்கை அதிர வைத்த ரசிகர்கள்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.