சென்னை: தமிழ்நாட்டில் உள்ள புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளன என்று வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு பெருமிதம் தெரிவித்துள்ளார். காடுகளின் காவலன் என அழைக்கப்படும் புலி, நம் நாட்டின் தேசிய வனவிலங்கு ஆகும். உலக அளவில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வந்ததைத் தொடர்ந்து, புலிகளை பாதுகாக்கும் நோக்கில் ஆண்டுதோறும் ஜூலை 29-ம் தேதி சர்வதேச புலிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் புலிகள் மாநாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/tiger-day.jpg)