Jailer trailer: ஜெயிலர் ட்ரைலரில் இடம்பெறும் அந்த ஒரு வார்த்தை…கெத்து காட்டும் தலைவர்

ரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படத்தை தான் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து இருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவான இப்படம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி திரையில் வெளியாகின்றது.

இதையொட்டி படக்குழு படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை விறுவிறுப்பாக துவங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய போது இருந்த எதிர்பார்ப்பை விட தற்போது இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. அதற்கு முழுக்க முழுக்க படக்குழு தான் காரணம் எனலாம்.

ஜெயிலர் ட்ரைலர்

படத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகின்றார் நெல்சன். அந்த வகையில் இப்படத்தில் மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் என இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்ததும் இப்படம் ஒரு பான் இந்திய படமாக உருவெடுத்தது. இதையடுத்து இப்படத்தில் இருந்து வெளியான போஸ்டர்ஸ் மற்றும் கிலிம்ஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துக்கொண்டே செல்ல சமீபத்தில் வெளியான ஜெயிலர் பாடல்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது.

Fahadh Faasil: மாமன்னன் ரத்னவேலுவிற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு..ஃபஹத் பாசிலின் ரியாக்ஷன் என்ன தெரியுமா ?

காவாலா, ஹுக்கும், ஜுஜுபி ஆகிய பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்துள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் ரஜினி, நெல்சன், கலாநிதிமாறன் ஆகியோர் படத்தை பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டனர்.

இவர் பேசுவதை வைத்து ஜெயிலர் திரைப்படம் அவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது என்றே தான் தெரிகின்றது. அந்த வகையில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

பஞ்ச் வசனம்

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போதே இப்படத்தின் டீசர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அன்றைய தினம் டீசர் வெளியாகவில்லை. இதையடுத்து ஆகஸ்ட் 2 அல்லது 3 ஆம் தேதி ஜெயிலர் படத்தின் ட்ரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ட்ரைலரில் ரஜினி ஒரு மாஸான பஞ்ச் வசனம் ஒன்றை பேசுவாராம். அது செம ட்ரெண்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

ஒரு வரியில் ரஜினி பேசும் வசனம் தான் ட்ரைலர் வெளியான பிறகு வைரலான விஷயமாக இருக்கும் என தகவல்கள் வருகின்றன. இதைத்தொடர்ந்து இப்படத்தின் ட்ரைலரையும் ,அந்த பஞ்ச் வசனத்தையும் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.