Jailer: ரஜினி சூப்பர்ஸ்டாராக இருக்க இதுதான் காரணம்..வெளிப்படையாக பேசிய பிரபலம்..!

ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் அடுத்த வாரம் திரையில் வெளியாகவுள்ளது. நெல்சனின் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவான இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் என மிகப்பெரிய நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

பொதுவாக ரஜினி மல்டி ஸ்டாரர் படங்களில் அவ்வளவாக நடித்ததில்லை என்றாலும் தற்போது இருக்கும் ட்ரெண்டிற்கு ஏற்ப ரஜினி ஜெயிலர் என்ற மல்டி ஸ்டாரர் படத்தில் நடித்துள்ளார். என்னதான் இது மல்டி ஸ்டாரர் படமாக இருந்தாலும் ஜெயிலர் முழுக்க முழுக்க சூப்பர்ஸ்டாரின் படமாகத்தான் இருக்கும்.

ரஜினி தான் சூப்பர்ஸ்டார்

இந்நிலையில் ரஜினிக்கும் சரி , நெல்சனுக்கும் சரி ஜெயிலர் திரைப்படத்தை எப்படியாவது வெற்றிபெற செய்யவேண்டும் என்ற கட்டாயம் இருக்கின்றது. எனவே இப்படத்தில் இருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் இருவரும் பார்த்து பார்த்து செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது ஜெயிலர் திரைப்படம் வெளியாக ஒரு வாரம் இருக்கும் நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டது.

Ajith: மகிழ் திருமேனிக்கு அஜித் செய்துகொடுத்த சத்யம்..விடாமுயற்சிக்கு கிடைத்த க்ரீன் சிக்னல்..!

செம மாஸாக அதே சமயத்தில் படத்தின் கதையை கணிக்கமுடியாத வகையில் ட்ரைலர் அமைந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. ரஜினி இப்படத்தில் செம் ஸ்டைலாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். குறிப்பாக ஜெயிலர் திரைப்படம் முழுக்க முழுக்க நெல்சனின் ஸ்டைலில் உருவாகியுள்ளது ட்ரைலரை பார்க்கும்போதே தெரிகின்றது.

இந்நிலையில் இதெல்லாம் ஒருபக்கம் இருக்க மறுபக்கம் சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்து பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற விவாதம் தான் தற்போது ஹாட் டாபிக்காக போய்க்கொண்டிருக்கிறது. அவ்வாறு இருக்கையில் பிரபல திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியம் சூப்பர்ஸ்டார் டைட்டிலை பற்றியும், ரஜினியை பற்றியும் பேசியுள்ளார்.

திருப்பூர் சுப்பிரமணியம் கருத்து

அவர் கூறியதாவது, ரஜினி தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக இருக்க மிக முக்கிய காரணம் அவர் படங்கள் செய்யும் வசூல் தான். அவரால் தயாரிப்பாளர்கள் லாபம் அடைந்துள்ளார்களே தவிர நஷ்டம் அடைந்ததே இல்லை. தன்னால் எந்த தயாரிப்பாளரும் நஷ்டமடைய கூடாது என்ற ஒரே குறிக்கோளோடு ரஜினி இருந்து வருகின்றார்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இந்த ஒரு காரணமே அவரை இன்றளவும் சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்தில் வைத்துள்ளது என்றார் திருப்பூர் சுப்பிரமணியம். இந்நிலையில் இவரின் இந்த கருத்துக்களை ரஜினி ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.